காண்டிராக்டர் கொலையில் 2 வாலிபர்கள் கைது; காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டினர்


காண்டிராக்டர் கொலையில் 2 வாலிபர்கள் கைது; காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டினர்
x

ராய்ச்சூரில், காண்டிராக்டர் கொலையில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டினர்.

பெங்களூரு:

ராய்ச்சூர் மாவட்டம் சதர்பஜார் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்தவர் மெகபூப் அலி, காண்டிராக்டர். இவரை கடந்த 21-ந் தேதி நடுரோட்டில் வைத்து 2 வாலிபர்கள் கொலை செய்திருந்தனர். மேலும் மெகபூப் அலியின் செல்போன், மோட்டார் சைக்கிளை வாலிபர்கள் எடுத்து சென்றிருந்தனர். இதுகுறித்து சதர்பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடிவந்தனர். இந்த நிலையில், காண்டிராக்டர் மெகபூப் அலியை கொலை செய்ததாக, சதர்பஜார் பகுதியை சேர்ந்த சேக் அமான் (22), சையத் அலி (21) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

மெகபூப் அலியின் உறவினர் மகளை சேக் அமான் காதலித்ததாகவும், அந்த இளம்பெண்ணின் பின்னால் சுற்றி திரிந்ததாகவும் தெரிகிறது. இதுபற்றி அறிந்த மெகபூப் அலி, சேக் அமானை கண்டித்துள்ளார். இதுதொடர்பாக 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சேக் அமான் தனது உறவினர் சையத் அலியுடன் சேர்ந்து மெகபூப் அலியை நடுரோட்டில் வைத்து ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.


Next Story