கொள்ளை வழக்குகளில் 3 பேர் கைது

பெங்களூருவில், கொள்ளை வழக்குகளில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு:
பெங்களூரு எலகங்கா போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 3 வாலிபர்களை கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர்கள் பெயர் முனிராஜ்(வயது 21), குண்டா(25), அஜித்குமார்(24) என்று தெரிந்தது.
இவர்கள் 3 பேரும், பெங்களூருவில் இரவு நேரங்களில் தனியாக செல்லும் நபர்களிடம் ஆயுதங்களை காட்டி மிரட்டி பணம், செல்போன்களை கொள்ளையடித்து வந்தது தெரிந்தது. கைதானவர்களிடம் இருந்து பணம், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





