கொள்ளை வழக்குகளில் 3 பேர் கைது


கொள்ளை வழக்குகளில் 3 பேர் கைது
x

பெங்களூருவில், கொள்ளை வழக்குகளில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு:

பெங்களூரு எலகங்கா போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 3 வாலிபர்களை கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர்கள் பெயர் முனிராஜ்(வயது 21), குண்டா(25), அஜித்குமார்(24) என்று தெரிந்தது.

இவர்கள் 3 பேரும், பெங்களூருவில் இரவு நேரங்களில் தனியாக செல்லும் நபர்களிடம் ஆயுதங்களை காட்டி மிரட்டி பணம், செல்போன்களை கொள்ளையடித்து வந்தது தெரிந்தது. கைதானவர்களிடம் இருந்து பணம், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Next Story