பஸ் பயணிகளிடம் செல்போன் பறித்த 3 பேர் பிடிபட்டனர்


பஸ் பயணிகளிடம் செல்போன் பறித்த 3 பேர் பிடிபட்டனர்
x

பெங்களூருவில் பஸ் பயணிகளிடம் செல்போன் பறித்த 3 பேர் பிடிபட்டனர்.

பெங்களூரு:

பெங்களூரு மாரத்தஹள்ளி போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் பஸ் பயணிகளிடம் செல்போன்கள் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், அவர்கள் பெயர் சாந்தகுமார், நாசீர், கணேஷ்குமார் என்று தெரிந்தது. இவர்கள் 3 பேரும் பெங்களூருவில் பி.எம்.டி.சி. பஸ் நிலையங்களில் சுற்றி திரிவார்கள்.

அப்போது அங்கு தனியாக அமர்ந்து இருக்கும் பயணிகளின் கையில் இருக்கும் செல்போன்களை 3 பேரும் பறித்து செல்வதை தொழிலாக வைத்திருந்தது தெரிந்தது. கைதான 3 பேரும் கொடுத்த தகவலின் பேரில் ரூ.2 லட்சம் மதிப்பிலான 7 விலை உயர்ந்தசெல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது.


Next Story