பசுமாட்டை திருடி விற்ற 5 பேர் கைது


பசுமாட்டை திருடி விற்ற 5 பேர் கைது
x

தட்சிண கன்னடாவில் பசுமாட்டை திருடி விற்பனை செய்ய முயற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

மங்களூரு:

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பஜால் கிராமத்தை சேர்ந்தவர் அஸ்வின். இவருக்கு சொந்தமான பசு மாட்டை கடந்த மாதம் (ஜூலை) 21-ந் தேதி மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து கங்கநாடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அஸ்வின் வீட்டில் மாட்டை திருடியது பங்களா குட்டே பகுதியை சோ்ந்த முகமது அஸ்பக் (வயது 22), ஜல்லிகுட்டேவை சேர்ந்த சுகைல் (19), அட்டூர் பகுதியைச் சேர்ந்த அசாருதீன்(31) மற்றும் முகமது அம்ரீத்(25), ஷாகித்(19) ஆகியோர் என்பதும், 5 பேரும் சேர்ந்து மாடுகளை இறைச்சிக்காக திருடி விற்று வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மாடுகளை திருட பயன்படுத்தப்பட்ட கார், இறைச்சியை வெட்ட பயன்படுத்தப்படும் கத்தி, அரிவாள் மற்றும் இதர பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

1 More update

Next Story