தொழில் அதிபர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர் கைது


தொழில் அதிபர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர் கைது
x

பெங்களூருவில், தொழில் அதிபர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு:

பெங்களூரு சாம்ராஜ்பேட்டை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் ஜக்குராஜ் ஜெயின். தொழில்அதிபர். இவர், கடந்த மாதம் (மே) 25-ந்தேதி கொலை செய்யப்பட்டார். அவரது வீட்டில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள், பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருந்தனர். ஜக்குராஜ் வீட்டில் வேலை செய்த பிஜாராம் தான் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, அவரை கொலை செய்துவிட்டு நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, பிஜாராம் உள்பட 3 பேரை சாம்ராஜ்பேட்டை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் இருந்த நகைகள், பணம் மீட்கப்பட்டு இருந்தது. இந்த கொலை வழக்கில் மற்றொரு நபர் தலைமறைவாக இருந்தார். அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வந்தனர்.

இந்த நிலையில், ஜக்குராஜ் கொலையில் தலைமறைவாக இருந்த ஓம்ராம் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து ஜக்குராஜ் வீட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 1½ கிலோ தங்க நகைகள், ரூ.16 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான ஓம்ராம் மீது சாம்ராஜ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story