9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: வளர்ப்பு தந்தை கைது


9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: வளர்ப்பு தந்தை கைது
x

மங்களூரு அருகே 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வளர்ப்பு தந்தையை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு:

9 வயது மகள்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உல்லால் பகுதியில் 25 வயது வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் தனது 9 வயது மகளுடன் வசித்து வந்தார். இவர்கள் இருவரும் வேறு ஊரைச் சேர்ந்தவர்கள். வேலை நிமித்தமாக அவர்கள் தட்சிண கன்னடா மாவட்டத்துக்கு குடிபெயர்ந்து அங்கு தங்கி இருந்தனர். இந்த நிலையில் அந்த பெண்ணின் கணவர் திடீரென உயிரிழந்தார்.

இதையடுத்து அந்த பெண், 25 வயது வாலிபரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். பின்னர் அந்த பெண் தனது 2-அது கணவர் மற்றும் 9 வயது மகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

பாலியல் வன்கொடுமை

இந்த நிலையில் அந்த பெண் கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியான அந்த பெண் பிரசவத்திற்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த சந்தர்ப்பத்தில் 25 வயது வாலிபர், தனது வளர்ப்பு மகளான 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார். தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதால் அந்த சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

அதிகப்படியான ரத்தப்போக்கால் அந்த சிறுமியின் உடல்நிலை மோசமானது. இதுபற்றி அறிந்த அக்கம்பக்கத்தினர் அந்த சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அந்த சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கைது

இதுபற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், பாண்டேஸ்வர் மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த சிறுமியின் வளர்ப்பு தந்தையான 25 வயது வாலிபரை கைது செய்தனர்.

1 More update

Next Story