விவசாயி படுகாயம்


விவசாயி படுகாயம்
x
தினத்தந்தி 23 Oct 2023 12:15 AM IST (Updated: 23 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

முல்பாகல் தாலுகாவில் சிறுத்தை தாக்கி விவசாயி படுகாயம்

முல்பாகல்:

கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகாவிற்கு உட்பட்ட உத்தகுண்டேஹள்ளி, பாடகஞ்சனஹள்ளி உள்பட பல கிராமங்களில் கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகிறது. இதனால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை 6 மணியளவில் காஞ்சனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான மஞ்சுநாத் என்பவர் தனது விவசாய தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு சிறுத்தை மஞ்சுநாத்தை தாக்கியது.

சிறுத்தையுடன், மஞ்சுநாத் மல்லுக்கட்டி போராடினார். அதையடுத்து சிறுத்தை வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது. தற்போது மஞ்சுநாத் முல்பாகல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

1 More update

Next Story