ஏரியில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் சாவு


ஏரியில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் சாவு
x

மைசூருவில் ஏரியில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 2 பேர் செத்தனர்.

மைசூரு:

மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா ஹெகந்தூறு கிராமத்தை சோ்ந்தவர்கள் சரத் ராவ் (வயது 17) மற்றும் சிவக்குமார்(17). இவர்கள் இருவரும் ஆனகோடு கிராமத்தில் உள்ள கல்லூாியில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தனர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் வீட்டில் வளர்த்து வந்த மாடுகளுக்கு தண்ணீர் குளிப்பாட்டுவதற்காக அருகில் உள்ள ஏரிக்கு சென்றனர்.

அப்போது அவர்கள் ஏரிக்கரையோரம் நின்று விளையாடி கொண்டிருந்தனர். அப்போது ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்ற 2 பேரும், தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். அந்தப்பகுதியில் யாரும் இல்லாததால் 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து ஆனகோடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story