பெட்ரோல் நிரப்பிவிட்டு தப்பி சென்ற 2 பேர் சிக்கினர்


பெட்ரோல் நிரப்பிவிட்டு தப்பி சென்ற 2 பேர் சிக்கினர்
x

பெங்களூருவில் பெட்ரோல் நிரப்பிவிட்டு தப்பி சென்ற 2 பேர் சிக்கினர்.

பெங்களூரு:

பெங்களூரு பேடராயனபுராவில் ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது. கடந்த 2-ந் தேதி நள்ளிரவில் அங்குவந்த 2 பேர், மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் நிரப்பினார்கள். அதற்கு உரிய பணத்தை கொடுக்காமலும், பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரை ஆயுதங்களை மிரட்டி விட்டும் 2 பேரும் சென்று விட்டனர்.

இதுகுறித்து பேடராயனபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 நபர்களையும் தேடிவந்தனர். இந்த நிலையில், போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் உதய் மற்றும் கிரண் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

1 More update

Next Story