மார்ச் மாதத்தில், டாலர் மதிப்பில்


மார்ச் மாதத்தில், டாலர் மதிப்பில்
x
தினத்தந்தி 1 May 2019 4:32 AM GMT (Updated: 1 May 2019 4:32 AM GMT)

நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி 0.37 சதவீதம் குறைந்தது

மும்பை

பிப்ரவரி மாதத்தில் டாலர் மதிப்பில் நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி 2.11 சதவீதம் குறைந்து 373 கோடி டாலராக இருந்தது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 381 கோடி டாலராக இருந்தது...

மார்ச் மாதத்தில், டாலர் மதிப்பில் நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி 0.37 சதவீதம் குறைந்து 342 கோடி டாலராக இருக்கிறது.

தங்கம் இறக்குமதி

நம் நாட்டில் ஆண்டுக்கு சராசரியாக 800 டன் முதல் 900 டன் வரை தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் தங்க கட்டிகள் மற்றும் கச்சா வைரங்கள் மதிப்புக் கூட்டப்பட்டு தங்க, வைர ஆபரணங்களாக மறுஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறையின் பங்கு 14 சதவீதமாக உள்ளது.

அமெரிக்கா, ஹாங்காங், ஐரோப்பா மற்றும் ஐக்கிய அரபு குடியரசு நாடுகள் இந்தியாவில் இருந்து நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்களை அதிக அளவில் இறக்குமதி செய்கின்றன. நம் நாட்டின் நவரத்தினம், ஆபரணங்கள் ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்கு மட்டும் சுமார் 25 சதவீதமாக உள்ளது.

கடந்த ஆண்டுகளில்...

2015-16-ஆம் நிதி ஆண்டில், ரூ.2.57 லட்சம் கோடிக்கு நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தது. 2016-17-ஆம் நிதி ஆண்டில் அது ரூ.2.37 லட்சம் கோடியாக குறைந்தது. முந்தைய நிதி ஆண்டில் (2017-18) ரூ.2.10 லட்சம் கோடியாக குறைந்தது. முந்தைய 2017-18-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது அது 11 சதவீத சரிவாக இருந்தது. அந்த ஆண்டில் டாலர் மதிப்பில் நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி 3,748 கோடி டாலராக இருந்தது.

கடந்த மார்ச் மாதத்தில் ரூபாய் மதிப்பு அடிப்படையில் நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ரூ.23,786 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது ரூ.22,342 கோடியாக இருந்தது. ஆக, ஏற்றுமதி 6.46 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே சமயம் டாலர் மதிப்பில் நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் 0.57 சதவீதம் குறைந்து 342 கோடி டாலராக குறைந்துள்ளது. சென்ற ஆண்டு மார்ச் மாதத்தில் அது 347 கோடி டாலராக இருந்தது.

373 கோடி டாலர்

பிப்ரவரி மாதத்தில் டாலர் மதிப்பில் நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி 2.11 சதவீதம் குறைந்து 373 கோடி டாலராக இருந்தது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது 381 கோடி டாலராக இருந்தது. இதே காலத்தில் ரூபாய் மதிப்பு அடிப்படையில் நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி 8.3 சதவீதம் அதிகரித்து ரூ.26,537 கோடியாக இருந்தது.

கடந்த நிதி ஆண்டில் (2018-19) 3,945 கோடி டாலருக்கு நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதியாகி இருக்கிறது. இது முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது 5 சதவீதம் அதிகமாகும்.

மத்திய அரசு, 2022-ஆம் ஆண்டுக்குள் இத்துறையின் ஆண்டு ஏற்றுமதியை 6,000 கோடி டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயித்து இருக்கிறது. இதன்படி ஆண்டுக்கு 6-7 சதவீத சராசரி வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. 2025-ஆம் ஆண்டில் இத்துறையின் ஏற்றுமதி 8,000 கோடி டாலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாரம்பரிய சந்தைகள்

நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டுமானால் அமெரிக்கா போன்ற பாரம்பரிய சந்தைகளை அதிகம் சார்ந்திருப்பதை தவிர்த்து லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் கவனம் செலுத்த வேண்டும் என ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் வலியுறுத்தி வருகிறது.

நம் நாட்டில் ஆபரணங்கள் வடிவமைப்பு, வைரங்களை அறுத்தல், பட்டை தீட்டுதல் போன்றவற்றில் தேர்ச்சியும், அனுபவமும் வாய்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். சர்வதேச அளவில், நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் பயன்பாட்டில் இந்தியாவின் பங்கு 29 சதவீதமாக உள்ளது.


Next Story