சாலையோர பள்ளத்தில் சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து - ஒருவர் உயிரிழப்பு


சாலையோர பள்ளத்தில் சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து - ஒருவர் உயிரிழப்பு
x

ஏரியூர் அருகே சரக்கு வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 18 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.

தர்மபுரி


தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள ஜருகு பகுதியைச் சேர்ந்தவர்கள், பென்னாகரம் அருகே உள்ள கொட்டாவூர் பகுதியில் உறவினர் வீட்டு கிரகப்பிரவேசம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சரக்கு வேனில் வீடு திரும்பியுள்ளனர்.

இந்த வாகனத்தில் 25-க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்துள்ளனர், சரக்கு வேன் ஜருகு நோக்கி சென்றுள்ளனர். அப்போது சின்னம்பள்ளி பகுதியில் சரக்கு வேன் சென்று கொண்டிருந்த போது சாலை வளைவில் நிலை தடுமாறி அருகிலுள்ள விவசாய பகுதியில் தாறுமாறாக ஓடி 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் செருப்பு பகுதியைச் சேர்ந்த ராமர் மகன் சகாதேவன் (வயது 36) என்பவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 18-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

லேசான காயமடைந்த 10 பேர் பென்னாகரம் அரசு மருத்துவமனையிலும், படுகாயம் அடைந்த 8 பேர் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பெரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story