கார் திருடிய 2 பேர் கைது


கார் திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 15 Nov 2022 6:45 PM GMT (Updated: 16 Nov 2022 4:47 PM GMT)

கார் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி மாருதி நகரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 40). இவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது காரில் குடும்பத்தோடு திருவண்ணாமலை கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அப்போது அவரது மற்றொரு காரை வீட்டின் முன் நிறுத்தி இருந்தார். இந்நிலையில் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிவந்து பார்த்தபோது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த காரை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து வடக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஒவ்வொரு இடமாக ஆய்வு செய்து பின் தொடர்ந்து சென்றனர். இதையடுத்து திருவையாறில் நின்ற காரை போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் காரை திருடிய திருவையாறு பகுதியை சேர்ந்த ஞான அன்பரசு (வயது 21), கலையரசன் (23) ஆகியோரை கைது ெசய்தனர். அவர்கள் இருவரும் வேறு ஒரு காரில் காரைக்குடிக்கு கொள்ளையடிக்கும் திட்டத்துடன் வந்துள்ளனர். இதற்கிடையே ரிலையன்ஸ் கார்டன் பகுதியில் பூட்டிய வீட்டில் புகுந்து 4½ பவுன் நகைகளை திருடியதும், கருப்பர் கோவில் அருகே நகை அடகு கடை என நினைத்து பலசரக்கடை பூட்டை உடைத்து அங்கு திருட முயற்சி செய்து ஏதும் கிடைக்காததால் ஊருக்கு திரும்பும் வழியில் கார்த்திக்குடைய காரை திருடியதும் தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story