1 கிலோ கஞ்சா பறிமுதல்

1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க தனிப்படை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டையில் காந்திநகர் திருக்கட்டளை ரோட்டில் ரோந்து பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் அரவிந்த் (வயது 33) என்பவரை பிடித்தனர். மேலும் அவரிடம் இருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கணேஷ்நகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ் அரவிந்தை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





