1,861 பயனாளிகளுக்கு ரூ.10½ கோடி கடனுதவி


1,861 பயனாளிகளுக்கு ரூ.10½ கோடி கடனுதவி
x
தினத்தந்தி 26 Oct 2023 6:45 PM GMT (Updated: 26 Oct 2023 6:46 PM GMT)

செய்யாறில் 1,861 பயனாளிகளுக்கு ரூ.10½ கோடி கடனுதவியை ஒ.ஜோதி எம்.எல்.ஏ. வழங்கினார்.

திருவண்ணாமலை

செய்யாறு

செய்யாறில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனிவாசன் தலைமை தாங்கினார். நகரமன்ற துணைத் தலைவர் பேபிராணி பாபு, முன்னாள் நகரமன்ற தலைவர் ஏ.என்.சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு 54 மகளிர் சுய உதவி குழுகள், 12 மாற்றுத்திறனாளிகள், 663 விவசாயிகள், 26 மகளிர் தொழில் முனைவோர் என 1,861 பயனாளிகளுக்கு ரூ.10 கோடியே 62 லட்சத்து 23 ஆயிரம் கடனுதவி வழங்கியும், புதிதாக சேர்ந்த 143 உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் நகரமன்ற உறுப்பினர்கள் கோவேந்தன், அகமத், செந்தில்குமார், கார்த்திகேயன், சவுந்்தரபாண்டியன், தி.மு.க. நிர்வாகிகள் ரவிக்குமார், விஜயபாஸ்கர், சின்னதுரை, ராம்ரவி, கருணாநிதி, ஞானமுருகன், துரைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்யாறு தாலுகா அனக்காவூர் ஊராட்சி ஒன்றியம் குண்ணவாக்கம் கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.13 லட்சத்து 57ஆயிரம் மதிப்பில் புதிதாக அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது.

அனக்காவூர் ஒன்றியக்குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனிவாசன், வெம்பாக்கம் ஒன்றியக்குழு தலைவர் மாமண்டூர் டி.ராஜி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹரி, குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அங்கன்வாடி மைய கட்டிடத்தினை திறந்து வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் முருகேசன், ஒன்றிய செயலாளர்கள் ஞானவேல், திராவிட முருகன், ராமச்சந்திரன், கருணாநிதி, புருஷோத்தமன், சடகோபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story