அரசு பஸ்சில் கட்டணமில்லாமல் 10 கோடி பேர் பயணம்


அரசு பஸ்சில் கட்டணமில்லாமல் 10 கோடி பேர் பயணம்
x

திருச்சி மாவட்டத்தில் அரசு பஸ்சில் கட்டணமில்லாமல் இதுவரை 10 கோடிபேர் பயணம் செய்துள்ளதாக திருச்சி மண்டல பொதுமேலாளர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் அரசு பஸ்சில் கட்டணமில்லாமல் இதுவரை 10 கோடிபேர் பயணம் செய்துள்ளதாக திருச்சி மண்டல பொதுமேலாளர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.

நகர பஸ்கள்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு போக்குவரத்துக்கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகர பஸ்களில் அனைத்து மகளிரும் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம் என உத்தரவிட்டார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (கும்பகோணம்) லிட்., திருச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு மே 7-ந்தேதி முதல் அக்டோபர் 5-ந்தேதி வரை 335 சாதாரண கட்டண நகர பஸ்கள் மூலம் இயக்கப்படும் அனைத்து வழித்தடங்களிலும் 9 கோடியே 94 லட்சம் முறை மகளிரும், 45 லட்சம் முறை திருநங்கைகளும், 9 கோடியே 55 லட்சம் முறை மாற்றுத்திறனாளிகளும் 40 லட்சம் முறை மாற்றுத்திறனாளிகளின் துணையர்களும் ஆக மொத்தம் 10 கோடியே 4 ஆயிரம் முறை மகளிர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளி பயணிகள் கட்டணமில்லாமல் பயணம் செய்துள்ளனர்.

திருச்சி மண்டலத்தில் நாள் ஒன்றுக்கு கட்டணமில்லா பயணம் செய்த மகளிர் எண்ணிக்கை 2 லட்சத்து 71 ஆயிரம் மற்றும் மொத்த பயணிகளில் நாள் ஒன்றுக்கு கட்டணமில்லா பயணம் செய்யும் மகளிர் 60.05 சதவீதமாகும்.

பொதுமக்கள் வரவேற்பு

மகளிரின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவிடும் வகையில் முதல்-அமைச்சரால் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (கும்பகோணம்) லிட்., திருச்சி மண்டல பொதுமேலாளர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.


Next Story