10-ந்தேதி பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம்


10-ந்தேதி பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம்
x

பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம் பெரம்பலூரில் 10-ந்தேதி நடக்கிறது.

பெரம்பலூர்

பொது வினியோக திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்பு பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம் பெரம்பலூர் தாலுகா வடக்குமாதவி கிராமத்தில் வருகிற 10-ந்தேதி நடக்கிறது. காலை 10 மணியளவில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு ஆர்.டி.ஓ. தலைமை தாங்குகிறார். இதேபோல் வேப்பந்தட்டை தாலுகா வெண்பாவூர் கிராமத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையிலும், குன்னம் தாலுகா பரவாய் (கிழக்கு) கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும், ஆலத்தூர் தாலுகா திம்மூர் கிராமத்தில், உதவி ஆணையர் (கலால்) தலைமையிலும் நடைபெறுகிறது. இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு உணவு பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.


Next Story