ஆந்திராவில் இருந்து பஸ்சில் 10 கிலோ கஞ்சா கடத்தல் - இளம் பெண் உள்பட 2 பேர் கைது


ஆந்திராவில் இருந்து பஸ்சில் 10 கிலோ கஞ்சா கடத்தல் - இளம் பெண் உள்பட 2 பேர் கைது
x

கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திராவில் இருந்து சென்னைக்கு பஸ்சில் கடத்த முயன்ற 10 கிலோ கஞ்சா சிக்கியது.

திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி:

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் இன்று கும்மிடிப்பூண்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை மாதவரம் நோக்கி சென்ற தனியார் பஸ்சை நிறுத்தி அவர்கள் சோதனை செய்தனர்.

அந்த பஸ்சில் ஆந்திர மாநிலம் ராஜமந்திரியை சேர்ந்த இளம் பெண் ராஜேஸ்வரி (வயது 32) மற்றும் பதன் பண்டு (21) ஆகிய 2 பேர் 10 கிலோ எடை கொண்ட கஞ்சாவை சென்னைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ்சில் கஞ்சா கடத்த முயன்ற இளம் பெண் உள்பட 2 பேரையும் கைது செய்தனர். கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story