பணம் வைத்து சூதாடிய 10 பேர் கைது

கிருஷ்ணகிரியில் பணம் வைத்து சூதாடிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி டவுன் போலீசார் பாப்பாரப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய கோவிந்தராஜ் (வயது 34), அப்பு (21), மதன் (30), அஜித் (25) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் சுங்கச்சாவடி அருகில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய பாபு (45), பாரூக் (37), சாதிக் (54), ஷாஜகான் (35), ரபீக் (53), முருகேஷ் (39) ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து ரூ.4 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





