தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை


தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை
x

சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்தவர் மாரிசெல்வம் (வயது 25). கூலி தொழிலாளி. இவர் கடந்த 29-11-2017-ல் 6 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிவகாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிசெல்வத்தை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் கூலித்தொழிலாளியான மாரிசெல்வத்திற்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 5,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ரூ. 2 லட்சம் நஷ்ட ஈடு வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார்.


1 More update

Related Tags :
Next Story