100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் போராட்டம்


100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் போராட்டம்
x

100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ராமசாமியாபுரம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்ட ெதாழிலாளர்கள் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் தங்களுக்கு முழு சம்பளத்தை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்ேபாது பணிகளை முழுமையாக செய்தால் முழு சம்பளம் கிடைக்க வருங்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் போராட்டத்தை ைகவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story