108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது


108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது
x

திட்டச்சேரியில் 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திட்டச்சேரியில் 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.

பிரசவ வலி

நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஆண்டித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய மனைவி அமுதா(வயது30). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் பிரசவ வலி ஏற்பட்டது.

இதையடுத்து அவரை குடும்பத்தினர், திருமருகல் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக அழைத்துச்சென்றனர். பின்னர் அங்கிருந்து அமுதாவை நாகை அரசு மருத்துவக்கல்லுாரி ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

ஆண் குழந்தை பிறந்தது

ஆம்புலன்சை இளங்கோவன் என்பவர் ஓட்டிச்சென்றார். ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் ரம்யா சென்றுள்ளார். திட்டச்சேரி அருகே ப.கொந்தகை பகுதியை கடந்து சென்றபோது அமுதாவிற்கு பிரசவ வலி அதிகமாகி உள்ளது. அப்போது மருத்துவ உதவியாளர் ரம்யா, ஆம்புலன்சிலேயே அமுதாவிற்கு பிரசவம் பார்த்துள்ளார். இதில் அமுதாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இதைதொடர்ந்து தாயும், குழந்தையையும் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 108 ஆம்புலன்சிலேயே கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்து தாய், குழந்தையை காப்பாற்றிய மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.


Next Story