108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்


108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்
x

ஜெயங்கொண்டம் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் நடந்தது. இதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வெத்தியார் வெட்டு கிராமத்தை சேர்ந்தவர் காயத்ரி (வயது 36). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்து சென்றனர். அப்போது பிச்சனூர் கிராமம் அருகே 108 ஆம்புலன்சிலேயே அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. 108 ஆம்புலன்ஸ் மருத்துவ நிபுணர் முத்துக்குமரன் பிரசவம் பார்த்தார். பின்னர் தாயும், சேயும் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர்.


Next Story