10-ம் வகுப்பு காலாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியீடு


10-ம் வகுப்பு காலாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியீடு
x

கோப்புப்படம் 

தமிழகத்தில் 10-ம் வகுப்பு காலாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வரும் செப்டம்பர் மாதம் காலாண்டு தேர்வு நடைபெற உள்ளது இந்த தேர்வுக்கான அட்டவணையானது தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.

இதில், காலாண்டு தேர்வு செப்டம்பர் 26ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலாண்டு தேர்வுக்குப் பின் ஒரு வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

விடுமுறைக்கு பிறகு அக்டோபர் 26-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story