தூக்குப்போட்டு 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை


தூக்குப்போட்டு 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை
x

கரூர் அருகே தூக்குப்போட்டு 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

கரூர்

10-ம் வகுப்பு மாணவி

கரூர் மாவட்டம், வாங்கல் அருகே உள்ள பெரிய வள்ளிபாளையத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரது மகள் நர்மதா (வயது 14). இவள் மண்மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் தன்னால் சரியாக படிக்க முடியவில்லை என்றும் படித்தாலும் மறந்துவிடுகிறது என்று வீட்டில் புலம்பி வந்தாள்.

தற்ெகாலை

இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த நர்மதா சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வாங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நர்மதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த தற்கொலை குறித்து ஆனந்தராஜ் கொடுத்த புகாரின்பேரில், வாங்கல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story