தூக்குப்போட்டு 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை


தூக்குப்போட்டு 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை
x

கரூர் அருகே தூக்குப்போட்டு 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

கரூர்

10-ம் வகுப்பு மாணவி

கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே உள்ள பழைய ஜெயங்கொண்டத்தை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் ராஜ். இவரது மகள் யுவஸ்ரீ (வயது 15). இவர் பழைய ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சனி, ஞாயிறு பள்ளி விடுமுறை என்பதால் யுவஸ்ரீ வீட்டில் இருந்தார்.

இதையடுத்து நேற்று முன்தினம் யுவஸ்ரீயிடம் அவரது தாய் வீட்டு வேலையில் உதவி செய்யுமாறு சொல்லி திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட யுவஸ்ரீ மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தொங்கினார்.

தற்கொலை

இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் யுவஸ்ரீயை மீட்டு சிகிச்சைக்காக கோவகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.பின்னர் யுவஸ்ரீயை மேல்சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் யுவஸ்ரீ ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து யுவஸ்ரீயின் உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தற்கொலை குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story