10-ம் வகுப்பு மாணவன் மாயம்..!


10-ம் வகுப்பு மாணவன் மாயம்..!
x
தினத்தந்தி 24 Jun 2023 12:08 AM IST (Updated: 24 Jun 2023 3:00 PM IST)
t-max-icont-min-icon

சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்தில் தங்கியிருந்த 10-ம் வகுப்பு மாணவன் மாயமானான்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை காரைக்கூட்ரோடு பகுதியில் சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் ஆதரவற்ற சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு மதுரை மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் தங்கியிருந்து இல்லத்திற்கு அருகில் உள்ள காரை அரசினர் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வருகிறான்.

ஒழுங்காக பள்ளிக்கு செல்லாமல், தங்கும் இல்லத்தில் உள்ள ஆசிரியர்களுடன் சிறுவன் அவ்வப்போது தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென இல்லத்தை விட்டு வெளியே சென்ற மாணவன் நீண்ட நேரமாகியும் மீண்டும் இல்லத்திற்கு திரும்பாமல் மாயமாகியுள்ளான். பல இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்காததால் சந்தேகமடைந்த அரசினர் குழந்தைகள் இல்லத்தின் கண்காணிப்பாளர் ராதா கண்ணன் கொடுத்த புகார்களின் பேரில் ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவனை தேடி வருகின்றனர்.

1 More update

Next Story