வாலிபரிடம் தேங்காய் வாங்கி ரூ.11 லட்சம் மோசடி

வாலிபரிடம் தேங்காய் வாங்கி ரூ.11 லட்சம் மோசடி செய்த கோவை வியாபாரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வாலிபரிடம் தேங்காய் வாங்கி ரூ.11 லட்சம் மோசடி செய்த கோவை வியாபாரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தேங்காய் வாங்கினார்
நாகர்கோவில் பார்வதிபுரத்தை சேர்ந்தவர் விஷால் கிருஷ்ணன் (வயது24). தேங்காய் வியாபாரி. இவரிடம் கோவை காந்திபுரம் 100 அடி ரோடு ராஜூ நாயுடு தெருவை சேர்ந்த அன்வர் சதாத் (52) என்பவர் கடந்த ஆகஸ்டு மாதம் 17 ஆயிரம் கிலோ தேங்காய் வாங்கினார்.
அதற்கு அவர் முதல்கட்டமாக ரூ.3 லட்சம் கொடுத்தார். பின் னர் ரூ.10 லட்சத்து 26 ஆயிரத்து 846, ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்து 75 என 2 காசோலைகளை கொடுத்தார். அந்த காசோலைகளை விஷால்கிருஷ்ணன் வங்கியில் செலுத்தினார். ஆனால் அன்வர் சதாத்தின் வங்கி கணக்கில் போதிய பணம் இல்லாததால் காசோலைகள் திரும்பி விட்டன.
ரூ.11 லட்சம்
உடனே விஷால்கிருஷ்ணன், அன்வர் சதாத்தை தொடர்பு கொண்டு பணம் கொடுக்கும்படி கூறினார். உடனே அவர் ரூ.74 ஆயிரம் மட்டும் கொடுத்தார். மீதி ரூ.11 லட்சத்தை கொடுக்க வில்லை.
அதைத்தொடர்ந்து விஷால் கிருஷ்ணன், பலமுறை தொடர்பு கொண்டு கேட்டும் அன்வர் சதாத் உரிய பதில் அளிக்காமல் காலம் கடத்தி உள்ளார்.
இதைத்தொடர்ந்து விஷால் கிருஷ்ணன் கோவை வந்து அன்வர் சதாத்தை நேரில்சந்தித்து தனக்கு தர வேண்டிய பணத்தை கொடுக்கும்படி கேட்டார். அதன் பின்னரும் அவர் பணத்தை திரும்ப கொடுக்கவில்லை.
விசாரணை
இதனால் ஏமாற்றம் அடைந்த விஷால் கிருஷ்ணன், ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் தேங்காய் வாங்கி ரூ.11 லட்சம் மோசடி செய்த அன்வர் சதாத் மீது மோசடி, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.