குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு


குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு
x

குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் தக்கலை பகுதியில் 4 பேரும், திருவட்டார் பகுதியில் 2 பேரும், ராஜாக்கமங்கலம் பகுதியில் 2 பேரும், குருந்தங்கோடு பகுதியில் 2 பேரும், அகஸ்தீஸ்வரம் பகுதியில் ஒருவரும் என மொத்தம் 11 பேர் ஆவர். இதில் ஆண்கள் 6 பேர், பெண்கள் 5 பேர் அடங்குவர். குழந்தைகள் யாரும் இல்லை.


Next Story