தமிழகத்தில் 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு


தமிழகத்தில் 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு
x

தமிழகத்தில் 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை,

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை மாநகராட்சியின் தெற்கு மண்டல துணை ஆணையராக சிம்ரன்ஜீத் சிங் கலான், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளராக கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறையின் கூடுதல் செயலாளராக விஜயலட்சுமி, கூட்டுறவு சங்கங்கங்களின் கூடுதல் பதிவாளராக சங்கர் நிமிக்கப்பட்டுள்ளனர்.

சமூக நலன், மகளிர் உரிமைத்துறை கூடுதல் இயக்குநராக கார்த்திகா, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய நிர்வாக இயக்குநராக ராஜகோபால் கங்கராவை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


Next Story