தமிழ்நாட்டில் 13 பேருக்கு கொரோனா


தமிழ்நாட்டில் 13 பேருக்கு கொரோனா
x

தமிழ்நாட்டில் நேற்று 13 பேர் கொரோனா பாதிப்பு அடைந்து உள்ளனர்.

சென்னை,

தமிழ்நாட்டில் நேற்று 13 பேர் கொரோனா பாதிப்பு அடைந்து உள்ளனர். இதில் 9 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் அடங்குவார்கள். அதிகபட்சமாக காஞ்சீபுரத்தில் 2 பேருக்கும், கன்னியாகுமரியில் 2 பேருக்கும், செங்கல்பட்டில் 2 பேருக்கும் மற்றும் வெளிநாட்டு பயணி ஒருவர் உள்பட மொத்தம் 9 மாவட்டங்களில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 42 பேர் குணம் அடைந்தனர். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 113 ஆக உள்ளது. நேற்று தமிழ் நாட்டில் கொரோனா தொற்றால் திருவள்ளூரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


Next Story