ஆசிரியர் தகுதி தேர்வில் 1.53 லட்சம் பேர் எழுதியதில் 14 சதவீதம் 'தேர்ச்சி'...!

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்றவர்களில் 21 ஆயிரத்து 543 பேர் இடைநிலை ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வில் 1.53 லட்சம் பேர் எழுதியதில் 14 சதவீதம் 'தேர்ச்சி'...!
Published on

சென்னை,

ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி. வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அனைத்து மாநிலங்களிலும் கடந்த 2010ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறும் நபர்களே பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

அதன் அடிப்படையில் தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான தேர்வு கடந்த அக்டோபர் 14-ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடத்தப்பட்டது. அந்த தேர்வில் தாள் ஒன்றில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 233 பேர் எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் டிசம்பர் 7-ம் தேதி தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியானது.

அதில் தாள் ஒன்றில் 21 ஆயிரத்து 543 பேர் இடைநிலை ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்றுள்ளனர். இது 14 சதவீதம் ஆகும். தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழை, டி.ஆர்.பி.,யின், http://trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில், மூன்று மாதம் வரை பதிவிறக்கம் செய்யலாம்.

விண்ணப்பதாரர்கள், விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய, ஏற்கனவே அவகாசம் வழங்கப்பட்டது. எனவே, தற்போது திருத்தம் செய்வதற்கான கோரிக்கையின் மீது, எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com