பள்ளிகளில் 14-ந்தேதி முதல் 10-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெறலாம்- அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு


பள்ளிகளில் 14-ந்தேதி முதல் 10-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெறலாம்- அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
x

தனித்தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

சென்னை,

அரசு தேர்வுகள் இயக்குனர் சா.சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

10-ம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் 14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாக அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வினியோகம் செய்யப்படும்.

தனித்தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story