தொழிலாளிக்கு 15 ஆண்டு சிறை


தொழிலாளிக்கு 15 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 9 Dec 2022 7:00 PM GMT (Updated: 9 Dec 2022 7:00 PM GMT)

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திண்டுக்கல்

பழனியை அடுத்த கோரிக்கடவை சேர்ந்தவர் முருகவேல் (வயது 32). கூலித்தொழிலாளி. கடந்த ஆண்டு (2021) இவர், 17 வயது சிறுமியை கடத்திச்சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் பழனி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் முருகவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவர் மீது திண்டுக்கல் விரைவு மகிளா கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர்.

அரசு தரப்பில் வக்கீல் ஜோதி வழக்கை நடத்தி வந்தார். பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த இந்த வழக்கு விசாரணையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம்சாட்டப்பட்ட முருகவேலுக்கு சிறுமியை கடத்தியதற்காக 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம், பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சரண் உத்தரவிட்டார்.


Next Story