தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு 1,516 பேர் விண்ணப்பம்


தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு 1,516 பேர் விண்ணப்பம்
x

தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு 1,516 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

பெரம்பலூர்

தமிழக அரசின் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், வேப்பூர் கல்வி மாவட்டங்களில் காலியாக உள்ள மொத்தம் 20 பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை தற்காலிக நியமனம் செய்ய தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து கடந்த 4-ந்தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாளான நேற்று விண்ணப்பதாரர்கள் சார்ந்த கல்வி மாவட்ட அலுவலரிடம் நேரிலும், மின்னஞ்சல் மூலமாகவும் சமர்ப்பித்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 20 தற்காலிக ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு மொத்தம் 1,516 பேர் விண்ணப்பித்துள்ளனர்.


Next Story