பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக 159-வது நாளாக கிராம மக்கள் போராட்டம்...!


பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக 159-வது நாளாக கிராம மக்கள் போராட்டம்...!
x

பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து159-வது நாளாக கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சுமார் 13 கிராமங்களை உள்ளடக்கிய 4,750 ஏக்கர் பரப்பளவில் சென்னையின் 2-வது புதிய பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இந்த நிலையில் நாகப்பட்டு, நெல்வாய், தண்டலம், மடப்புரம், ஏகனாபுரம், மேலேறி ஆகிய கிராமப்புறங்களில் விளைநிலங்கள் மட்டுமின்றி குடியிருப்புகளும் அகற்றப்பட உள்ளது. விமான நிலையம் அமைப்பதினால் தங்களின் இருப்பிடமும், வாழ்வாதாரமுமான விளைநிலங்களும் பாதிக்கப்படும் எனக் கூறி பரந்தூர் விமான நிலையம் அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கிராமசபை கூட்டங்களிலும் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என தீர்மானங்களை நிறைவேற்றி வருகின்றனர். மத்திய-மாநில அரசுகளை கண்டித்து நாள்தோறும் இரவு நேரங்களில் தொடர் போராட்டங்களை கிராம மக்கள் நடத்தி வரும் நிலையில் 159-வது நாளாக நேற்று இரவு ஏகனாபுரம் கிராம மக்கள் அனைவரும் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story