எருது விடும் விழாவில் மாடு முட்டி 16 பேர் காயம்


எருது விடும் விழாவில் மாடு முட்டி 16 பேர் காயம்
x

திருப்பத்தூர் அருகே எருது விடும் விழாவில் மாடுகள் முட்டி 16 பேர் காயமடைந்தனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே எருது விடும் விழாவில் மாடுகள் முட்டி 16 பேர் காயமடைந்தனர்.

எருது விடும் விழா

திருப்பத்தூர் ஒன்றியம் தாதனவலசை கிராமத்தில் எருது விடும் விழா நடைபெற்றது. இதில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, வெள்ளக்குட்டை, பர்கூர், ஊத்தங்கரை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 200 காளைகள் பங்கேற்றன. முன்னதாக காளைகளை, கால்நடை உதவி இயக்குனர் டாக்டர் நாசர் பரிசோதனை செய்து 3 காளைகள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

எருது விடும் விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் எம்.சசிகுமார் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற முன்னாள் தலைமை ஆசிரியர் பி.. வீரமணி, ஊர் கவுண்டர் வீரபத்திரன், தர்மகர்த்தா துரைசாமி முன்னிலை வகித்தனர். ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. கொடியசைத்து விழாவை தொடங்கி வைத்தார். கே.வெங்கடேசன் வரவேற்றார். வருவாய்த் துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன், தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

16 பேர் காயம்

காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டு, சீறிப்பாய்ந்து ஓடின. அப்போது இருபுறமும் நின்று காளைகளை உற்சாகப்படுத்தியவர்களை மாடுகள் முட்டியதில் 16 பேர் காயமடைந்தனர்.

குறைந்த நேரத்தில் வேகமாக ஓடி இலக்கை அடைந்த காளைகளுக்கு முதல் பரிசாக ரு.60 ஆயிரய், இரண்டாவது பரிசாக ரூ.50 ஆயிரம், மூன்றாவது பரிசாக ரூ.40 ஆயிரம் என 51 ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் சந்தோஷ் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் இளைஞரணியினர், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story