எருது விடும் திருவிழாவில் மாடு முட்டி 16 பேர் காயம்


எருது விடும் திருவிழாவில் மாடு முட்டி 16 பேர் காயம்
x

திருப்பத்தூர் அருகே எருது விடும் திருவிழாவில் மாடுகள் முட்டி 15 பேர் காயமடைந்தனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே எருது விடும் திருவிழாவில் மாடுகள் முட்டி 15 பேர் காயமடைந்தனர்.

எருது விடும் விழா

கந்திலி ஒன்றியம் ஆவல் நாயக்கன்பட்டி ஊராட்சி கிருஷ்ணாபுரம் கிராமத்தில் எருது விடும் திருவிழா நடைபெற்றது. இதில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, வெள்ளக்குட்டை, பர்கூர், ஊத்தங்கரை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 200, எருதுகள் பங்கேற்றன.

எருது விடும் திருவிழாவை ஒட்டி உறுதிமொழி எடுக்கப்பட்டது. எருதுகள் ஓடும் வீதியின் இருபுறமும் தடுப்புகட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன. விழா தொடங்குவதற்கு முன்பு கால்நடைகளை கால்நடை உதவி இயக்குனர் டாக்டர் நாசர், பரிசோதனை செய்தார், இதில் 3 காளைகள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து நடந்த விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.சுகுமார், தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே.செல்வராஜ், டி கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் சாந்தா சண்முகம் வரவேற்றார்,

ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ.கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

15 பேர் காயம்

அதன்பின் எருதுகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது. அவைசீறிப் பாய்ந்து ஓடின அப்போது இருபுறமும் நின்று இருந்த பொதுமக்கள் உற்சாகப்படுத்தினர்.

காளைகள் முட்டியதில் 15 பேர் காயமடைந்தனர். குறைந்த நேரத்தில் வேகமாக ஓடி இலக்கை அடைந்த காளைகளுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சத்து 22 ஆயிரத்து 222, இரண்டாவது பரிசாக ரூ.75 ஆயிரத்து 555, 3-வது பரிசாக ரூ.60 ஆயிரத்து 555 என இவை உள்பட 68 பரிசுகள் வழங்கப்பட்டன.

விதிமீறல்கள் ஏதும் நடக்கிறதா என வருவாய்த் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

முடிவில் மதி பாலன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் இளைஞரணியினர, எருது விடும் திருவிழா கமிட்டி, செய்திருந்தனர்.


Next Story