தமிழ்நாட்டில் இன்று 16 பேருக்கு கொரோனா தொற்று


தமிழ்நாட்டில் இன்று 16 பேருக்கு கொரோனா தொற்று
x

கொரோனா பாதிப்பில் இருந்து 21 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

சென்னை,

தமிழ்நாட்டில் இன்று 312 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்தவகையில், சென்னை மாவட்டத்தில் 11 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 பேருக்கும், கோவை, காஞ்சீபுரம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் என 16 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இன்று கொரோனா பாதிப்பில் இருந்து 21 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 179 ஆக உள்ளது. இதேபோல, இன்று தமிழ்நாட்டில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story