மது விற்ற 16 பேர் கைது


மது விற்ற 16 பேர் கைது
x

நெல்லை மாவட்டத்தில் மது விற்ற 16 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி போலீசார் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 25-ந்தேதி முதல் நேற்று வரை சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 16 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 105 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


Next Story