தமிழகத்தில் 1,624 பேருக்கு கொரோனா


தமிழகத்தில் 1,624 பேருக்கு கொரோனா
x

தமிழகத்தில் நேற்று 969 ஆண்கள், 655 பெண்கள் என மொத்தம் 1,624 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 969 ஆண்கள், 655 பெண்கள் என மொத்தம் 1,624 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 353 பேர், செங்கல்பட்டில் 171 பேர், கோவையில் 159 பேர் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. இதில் 7 மாவட்டங்களில் மட்டும் பாதிப்பு 10-க்கும் கீழ் குறைவாக உள்ளது.மேலும், 12 வயதுக்கு உட்பட்ட 79 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 228 முதியவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஆஸ்பத்திரியில் 622 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி 13 ஆயிரத்து 510 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 4 ஆயிரத்து 357 பேரும், செங்கல்பட்டில் 1,364 பேரும் சிகிச்சையில் இருக்கின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story