உரிமம் புதுப்பிக்கப்படாத 17 வாகனங்கள் பறிமுதல்


உரிமம் புதுப்பிக்கப்படாத 17 வாகனங்கள் பறிமுதல்
x
சேலம்

ஆத்தூர்

ஆத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ரகுபதி தலைமையில் வாகன ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் அலுவலர்கள் ஆத்தூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது உரிமம் புதுப்பிக்கப்படாத 17 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேபோல் தொடர்ந்து வாகன தணிக்கை நடைபெறும் என்றும், பறிமுதல் செய்யப்பட்ட 17 வாகனங்களுக்கும் ரூ.3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 More update

Next Story