ரேஷன் அரிசி கடத்திய 193 பேர் கைது


ரேஷன் அரிசி கடத்திய 193 பேர் கைது
x

ரேஷன் அரிசி கடத்திய 193 பேர் கைது: குடிமைப்பொருள் அதிகாரிகள் நடவடிக்கை.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை அலுவலர்கள் ஆகியோர் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 14-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையிலான ஒரு வாரத்தில் ரேஷன் கடைகளில் இருந்து கடத்த முயன்ற 53 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 9 ஆயிரத்து 447 குவிண்டால் அரிசி, 25 லிட்டர் மண்எண்ணெய், 41 கியாஸ் சிலிண்டர், 144 கிலோ கோதுமை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 193 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story