கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேர் கைது


கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேர் கைது
x

கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த கரசங்கால் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 47). ஆட்டோ டிரைவர். இவரை கடந்த மாதம் கரசங்கால் மருந்து கடை அருகே வைத்து கத்தியால் வெட்டி கொல்ல முயன்றனர். அதே போல் சமத்துவபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த விக்னேஷ் (26) என்பவரையும் கத்தியால் வெட்டி கொலை செய்ய முயன்றனர். கொலை முயற்சியில் ஈடுபட்டது. கரசங்கால் பகுதியை சேர்ந்த கோபி என்ற கோபிநாத் (வயது 35), சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த

விக்கி என்ற விக்னேஷ் (வயது 29) என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரும் கரசங்கால் ஏரிக்கரையில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

மணிமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் ரவி தலைமையில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு சென்று இருவரையும் மடக்கி பிடித்து அவர்களிடம் இருந்த 1½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

போலீஸ் விசாரணையில் கோபி மீது ஒரு கொலை, 8 கொலை முயற்சி, 7 அடிதடி வழக்குகள், கொள்ளையடித்தல் போன்ற வழக்குகள் மணிமங்கலம், சோமங்கலம், ஓட்டேரி, கானாத்தூர் போலீஸ் நிலையங்களில் உள்ளது தெரியவந்தது.. விக்னேஷ் மீது மணிமங்கலம், சோமங்கலம் போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி, அடிதடி, கொள்ளையடித்தல், வெடி குண்டு வைத்து மிரட்டுதல் போன்ற வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story