தொழிலாளிக்கு கொலை மிரட்டல்; 2 பேர் கைது


தொழிலாளிக்கு கொலை மிரட்டல்; 2 பேர் கைது
x

மோகனூரில் தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்

மோகனூர்

ராசிபுரம் திரு.வி.க. நகரை சேர்ந்தவர் சண்முகம் என்பவரது மகன் ரகுநாத் (வயது 25). கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று மோகனூர் காவிரி ஆற்றங்கரை அருகில் உள்ள சிவன் கோவிலில் சாமி கும்பிட தனது நண்பர்களுடன் வந்திருந்தார். அப்போது காவிரி ஆற்றங்கரையோரம் சென்றபோது 2 பேர் வழிமறித்து அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.500-ஐ பறித்து கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அப்போது ரகுநாத் சத்தம் போடவே உடன் வந்த நண்பர்கள், வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரையும் பிடித்து மோகனூர் போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துர்க்கைசாமி விசாரணை செய்ததில் காட்டு பிள்ளையார் கோவில் செயல் பகுதியை சேர்ந்த மணிகண்டன் மகன் விக்ரம் (21) மற்றும் 16 வயது சிறுவன் என தெரிய வந்தது. இதைதொடர்ந்து அவர்கள் 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்து நாமக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாமக்கல் கிளைசிறையில் அடைத்தனர்.

1 More update

Next Story