லாரியில் எம்.சாண்ட் கடத்திய 2 பேர் கைது


லாரியில் எம்.சாண்ட் கடத்திய 2 பேர் கைது
x

நெல்லை முன்னீர்பள்ளம் அருகே லாரியில் எம்.சாண்ட் கடத்திய 2 பேர் போலீசாா் கைது செய்தனர்.

திருநெல்வேலி

முன்னீர்பள்ளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் முன்னீர்பள்ளம் அருகே உள்ள தருவை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தருவை பஸ் நிறுத்தம் அருகே உரிய அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக எம்சாண்ட் மண்ணை 2 லாரிகளில் வைத்திருந்ததாக, அதே பகுதியை சேர்ந்த பட்டன் (வயது 39) வேலு (40) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் 3 யூனிட் மண் மற்றும் 2 லாரிகளை பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story