வாலிபரை தாக்கிய 2 பேர் கைது


வாலிபரை தாக்கிய 2 பேர் கைது
x

சொத்து தகராறில் வாலிபரை தாக்கிய 2 போ் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

வடமதுரை அருகே உள்ள காணப்பாடி மாலப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 23). மோட்டார் சைக்கிள் மெக்கானிக்கான இவர், காணப்பாடியில் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இவரது பெற்றோர் இறந்து விட்டதால், தனது தாத்தா-பாட்டியுடன் வசித்து வருகிறார். இவருக்கும், அவரது உறவினரான அதே பகுதியை சேர்ந்த முருகன் (50) என்பவருக்கும் சொத்து பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சிலதினங்களுக்கு முன்பு முருகன் மற்றும் கரிவாடன்செட்டிபட்டியை சேர்ந்த மதனகோபால் (28) ஆகியோர் கார்த்திக்கின் தாத்தா வீட்டில் செங்கலை கொண்டு எறிந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கார்த்திக் அவர்களிடம் தட்டிக்கேட்டார். அப்போது ஏற்பட்ட தகராறில், அவர்கள் 2 பேரும் சேர்த்து கார்த்திக்கை கம்பு மற்றும் கல்லால் தாக்கி விட்டு தப்பி சென்றனர். இதில் காயம் அடைந்த கார்த்திக், சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வடமதுரை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி வழக்குப்பதிவு செய்து முருகன், மதனகோபால் ஆகியோரை கைது செய்தார்.


Next Story