பாலியல் தொழிலில் பெண்ணை ஈடுபடுத்திய 2 பேர் கைது


பாலியல் தொழிலில் பெண்ணை ஈடுபடுத்திய 2 பேர் கைது
x

குடியாத்தத்தில் பாலியல் தொழிலில் பெண்ணை ஈடுபடுத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலூர்

குடியாத்தம் புதுப்பேட்டையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் பாலியல் தொழில் நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் அந்த விடுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ஒரு அறையில் பெண்ணுடன் ஒரு நபர் இருந்தார்.

அந்த பெண்ணிடம் விசாரணை செய்தபோது குடும்ப பண தேவைக்காக தெரிந்தவரை அணுகிய போது நல்ல வேலை உள்ளது என்று ஆசைவார்த்தை கூறி பாலியல் தொழிலில் ஈடுபட செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலியல் தொழிலில் பெண்ணை ஈடுபடுத்திய சங்கர் (வயது 33), நந்தகுமார் (24) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story