ரேஷன் அரிசி பதுக்கி விற்பனை செய்த 2 பேர் கைது


ரேஷன் அரிசி பதுக்கி விற்பனை செய்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 31 Aug 2023 1:15 AM IST (Updated: 31 Aug 2023 1:16 AM IST)
t-max-icont-min-icon

ரேஷன் அரிசி பதுக்கி விற்பனை செய்த 2 பேர் கைது

கோயம்புத்தூர்

கோவை

குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை மேற்கு மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி அறிவுறுத்தலின்படி, துணை சூப்பிரண்டு கிருஷ்ணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில் அரசூர் பெருமாள் கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த ஒரு வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரேஷன் அரிசி விற்பனைக்கு கொண்டு செல்வதற்காக வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து வேனில் வந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் அரசூர் பகுதியை சேர்ந்த லிங்கபாண்டி (வயது 43), ரமேஷ் (38) என்பது தெரியவந்தது. இவர்கள் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி, அதனை வட மாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 600 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

-

1 More update

Next Story