கஞ்சா விற்ற 2 பேர் கைது


கஞ்சா விற்ற 2 பேர் கைது
x

கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி சிலர் மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக கோத்தகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் கோத்தகிரி அருகே கட்டபெட்டு பகுதியில் திடீர் மதுவிலக்கு சோதனை மேற்கொண்டனர். அப்போது பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றுக் கொண்டிருந்த கக்குச்சி தொட்டண்ணி கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் (வயது 38) என்பவரை பிடித்து விசாரித்தனர். இதில் மதுபாட்டில்களை விற்றது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், விற்பனைக்கு வைத்திருந்த 16 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். கன்னேரிமுக்கு பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (19), ராம்சந்த் சதுக்கம் பகுதியை சேர்ந்த மகேஷ் (38) ஆகிய 2 பேர் தலா 30 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story