கஞ்சா விற்ற 2 பேர் கைது


கஞ்சா விற்ற 2 பேர் கைது
x

கூடலூரில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நீலகிரி

கூடலூர்,

கூடலூர் போலீசார் நகர பகுதியில் நேற்று ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் போலீசார் அவர்களை சோதனை செய்தபோது, விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து கூடலூர் போலீசார் கஞ்சா விற்ற காசிம்வயலை சேர்ந்த சத்தியராஜ் (வயது 21), இர்பான் பதான் (18) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.


1 More update

Next Story